Posts

The Concept of Avatar in Hinduism (Tamil)

இந்து மதம் காட்டும் அவதாரக் கொள்கை

எப்போதெல்லாம் பூமியில் நல்லோர்கள் துன்பத்துக்கு உள்ளாகிறார்களோ, தீயோரின் கைகள் மேலோங்கித் தர்மம் நிலை குலைகிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதரித்து வருகிறார் என்பது இந்து மதத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று.

அவதாரம் என்றாலே ‘இறங்கி வருதல்’ என்றுதான் பொருள். அவசியமான தக்க சமயம் வரும்போது இறைவன் அவதரித்து வருகிறார் என்கிற செய்தியை பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் “யதா யதாஹி தர்மஸ்ய….” எனும் சுலோகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்:

அர்ஜுனா, எப்போதெல்லாம் தருமம் குன்றி அதர்மம் மேலெழுகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; சாதுக்களைக் காத்து, தீயோரை அழித்து தர்மத்தை நிலை நாட்ட யுகம் தோறும் நான் வந்துதிக்கிறேன்(ப.கீ. 4-7,8)

இறைவன் மனித வடிவெடுக்காது வேறு வடிவில் அவதரித்து வந்த (மச்சாவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் போன்ற) அவதாரக் கதைகளையும் நமது இதிகாச புராணங்கள் விவரித்துள்ளன.

இந்துமதத்தின் அடிப்படையில் கடவுள் ஒருவரே. அவரை உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என்கின்றன. அந்தப் பிரம்மம் பெயர்-உருவங்களுக்கு அப்பாற்பட்டது. எங்கும் பரந்தது; எல்லாவற்றிலும் உள்ளது; எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. பார்க்கப் போனால் இந்தப் பிரபஞ்சத்தில் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே அந்தப் பிரம்மத்தின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே. அந்தப் பிரம்மம் அணுவைக்காட்டிலும் நுண்ணியது; அதே சமயம் பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமானது.

ஆக, பிரம்மத்தில் எல்லாமே அடங்கியதால், பல்வேறு பெயர்-உருவத்துடன் கூடிய (ஈசுவரன் எனப்படும்) வழிபாட்டு தெய்வங்களும் அந்தப் பிரம்மத்தின் வெளிப்பாடே.

படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் எனும் மூன்று பிரதான தெய்வங்கள் இந்துமதத்தில் நாம ரூபங்களோடு கற்பிக்கப் பட்டுள்ளனர்.

அதில் விஷ்ணுவையே அந்தப் பரப் பிரம்மமாகக் கொண்டாடி வழிபடுவோர்கள் வைஷ்ணவர் எனப்படுகின்றனர். படைக்கும் கடவுளான பிரம்மாவே (படைப்புத் தொழிலை செய்வதற்காக) அந்த விஷ்ணுவின் நாபியிலிருந்து விஷ்ணுவால் தோற்றுவிக்கப் பட்டவர்தாம் என்பது வைஷ்ணவர்கள் கொள்கை.

சைவ சம்பிரதாயப்படியோ, சிவனே அந்த பரப் பிரம்மம். அவரே எல்லாம். அவரது அடியும் முடியும் கூட பிரம்மா விஷ்ணுவுக்கு எட்டமுடியாதவை என்று சைவ புராணங்கள் கூறும்.

அவ்வாறே சக்தியை பரப் பிரம்மமாகக் கொண்டாடும் சாக்தர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவனைப் படைத்ததே அந்த சக்திதான் என்பார்கள்.

நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் பிரதானக் கடவுளர்கள்; அவதாரங்கள் அல்ல.

(ஆயினும் ஒரு சில சாத்திரங்களில் இம்மூன்று தெய்வங்களையும் ‘குணாவதாரங்கள்’ என்று குறிப்பிடுவதும் உண்டு. சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் பிரகிருதியின் முக்குணங்களில் பிரம்மா சத்வகுண அவதாரமாகவும், விஷ்ணு ரஜோ குண அவதாரமாகவும், சிவன் தமோகுண அவதாரமாகவும் உருவகப் படுத்துவர்).

ஆயினும் இவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர்;  பிறப்பு இறப்பு அற்ற நித்திய தெய்வங்களாகவே கூறப்படுகின்றனர். புராணங்களில் இவர்களின் செயல்பாடுகளைப் பற்றி கூறப்படும் கதைகள்,  ஈசுவர லீலை என்பதாக அறியப்படும்.

விஷ்ணுவின் அவதாரங்கள்

நமது புராணங்களின் படி (விஷ்ணு புராணம், பாகவத புராணம் போன்றவற்றில்) பகவான் விஷ்ணுவே பற்பல அவதாரங்கள் எடுத்து உலகியரை இரட்சிக்க வருகிறார் என்று கூறுகின்றன. அவற்றில் பத்து அவதாரங்கள் சிறப்பாகக் குறிப்பிடப் படுகின்றன. அவை:

(1) மத்ஸ்யாவதாரம் (2) கூர்மாவதாரம் (3) வராகாவதாரம் (4) வாமனாவதாரம் (5) நரசிம்மாவதாரம் (6) பரசுராமாவதாரம் (7) ராமாவதாரம் (8) கிருஷ்ணாவதாரம் (9) பலராமாவதாரம் (10) கல்கியாவதாரம்.

பலராமருக்குப் பதில் புத்தரை அவதாரமாகச் சொல்வதும் உண்டு. கல்கி அவதாரம் இனிமேல்தான் கலியுகத்தில் நிகழவிருக்கிறது என்பது நம்பிக்கை.

அவதாரங்கள் பத்துக்குள் அடங்குவதல்ல

ஆயினும், இந்துமதப் புராணங்களிலேயே தலையாயதாகவும், பக்தி, ஞானம் இரண்டையும் சிறப்பாக விளக்கும் புராண நூலாகவும் கூறப்படும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் மேற்கண்ட 10 அவதாரங்களுக்கும் உபரியாய் மேலும் 17 அவதாரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனர். இவர்களது சரித்திரங்களும் பாகவதத்தில் தரப்பட்டுள்ளன. (ஆக 27 அவதாரங்கள்). அந்த அவதார புருஷர்கள்:

(11) சனகர் (12) சனந்தர் (13) சனாதனர் (14) சனத்குமாரர் (15) நாரதர் (16) நரர் (17) நாராயணர் (18) கபிலர் (19) தத்தாத்ரேயர் (20) யாக்ஞர் (21) ரிஷபர் (22) பிருது (23) மோஹினி (24) கருடன் (25) தன்வந்திரி (26) வியாசர் (27) புத்தர்.

அவதாரத்தில் தெய்வீக வெளிப்பாட்டின் அளவு – பூர்ணம், அம்சம், கலை

நமது சில சாத்திரங்களில் படைப்பிலுள்ளவற்றில் வெளிப்படும் இறை சக்தி பற்றிக் குறிப்பிடும்போது ‘கலை’ எனும் ஓர் அளவைக் கூறுவதுண்டு. அதன்படி, செடி கொடிகளுக்கு 2 கலை, மிருகங்களுக்கு 2 – 3 கலை, சாமானிய மனிதர்களுக்கு 5- 6 கலை, ரிஷிகளுக்கும் மகாத்மாக்களுக்கும் 7 – 8 கலை என்றெல்லாம் சொல்வார்கள். ராம அவதாரம் 12 கலை; கிருஷ்ணாவதாரம் 16 கலை என்பார்கள். 16 கலை அளவுள்ள கிருஷ்ணாவதாரம் பூர்ணாவதாரம் (முழுமையான அவதாரம்) எனக் குறிப்பிடப்படுகிறது.

இவை தவிர, இறைவனின் ஒரு அம்சம் மாத்திரம் வெளிப்படும் அவதாரங்கள் அம்சாவதாரங்கள் எனப்படுகின்றனர். அதன்படி, மச்ச, கூர்ம, வராக, பலராம அவதாரங்களை அம்சாவதாரங்கள் என்பார்கள். ராமாயணத்தில் வரும் லக்ஷ்மண, பரத சத்ருக்கினர்களும் விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்களே.

மேலும் சக்தி ஆவேச அவதாரங்கள் என்றும் ஒரு வகை சொல்லப்படுகிறது. இறைவனின் உக்கிரமான சக்தி இந்த அவதாரங்கள் மூலம் வெளிப்பட்டு பெருமளவில் அழிக்கும் சக்தி வேலை செய்யும். பரசுராமர் அவதாரம் சக்தியாவேச அவதாரமாகக் குறிப்பிடப் பெறுகிறது. நரசிம்மாவதாரமும் அவ்வாறே.

அவதாரங்கள் எண்ணிக்கைக்குட்பட்டவை அல்ல

அவதாரங்கள் எண்ணிலடங்கா என்றும் ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுவதாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவதுண்டு. அது மெய்யாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் இறையவதாரங்களைப் பற்றி (10 அவதாரங்கள், 27 அவதாரங்கள் என்றெல்லாம்) குறிப்பிடும் புராணங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டவை. எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அவதாரம் நிகழ்கிறது என்கிற கூற்றின்படி பார்த்தால், புராண காலத்துக்குப் பிற்பாடும் அவதாரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தாகவேண்டும் என்பது தெளிவாகிறது.

அவதார புருஷர்கள்

அப்படிப் பிற்காலத்தில் வந்த சில மகாத்மாக்கள் பக்தர்களால் அவதார புருஷர்களாகக் கொண்டாடப் பெறுகின்றனர். மெய்யான ஆன்மீக நாட்டம் உள்ள சாதகர்கள், நமது பண்டைய சாத்திர நூல்களுக்கும், புராணங்களுக்கும் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை இவர்களது போதனைகளுக்கும் வாழ்க்கை சரிதங்களுக்கும் அளிக்கிறார்கள்.

அவர்களில் சிலர்:

  • ஸ்ரீ ஆதி சங்கரர் — இவரை சிவனின் அவதாரமாகக் கருதுகின்றனர்.
  • ராமானுஜர்: தென்னாட்டு வைணவர்கள், இவரை லக்ஷ்மணன்/ பலராமன் /ஆதிசேஷனின் அவதாரமாகக் குறிப்பிடுவர்.
  • சைதன்ய மகா பிரபு: வங்காளத்தில் இவர் ராதையின் அவதாரமாகக் கொண்டாடப் பெறுகிறார்.
  • ஷிர்டி சாய்பாபா: மதங்களைக் கடந்து நிற்கும் இறைவனின் அவதாரமாக ஷிர்டி சாய் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார்.
  • சத்ய சாய்பாபா: சிவ சக்தியின் அவதாரம் என்பார்கள் சாய் பக்தர்கள்.
  • ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர்: இவர் காளியின் அவதாரமாகவும், சைதன்யரின் மறு அவதாரமாகவும் அதே சமயம் மதங்களைக் கடந்து நின்ற ஞானியாகவும் போற்றப் படுகிறார்.
  • பகவான் ரமண மகரிஷி: பூரண ஞானியான இவர் அவதாரம் எனும் கோட்பாட்டுக்குள் வராதவர் எனினும் அவரை முருகனாகக் கண்டு தரிசித்து முருகனின் அவதாரமாகக் கூறும் பக்தர்களும் உண்டு.
  • (அம்மா) மாதா அமிர்தானந்தமயி தேவி: தேவி பராசக்தியின்/ லலிதாம்பிகையின்/ பவதாரிணியின் அவதாரமாகவே இவரது பக்தர்கள் இவரைப் போற்றுகின்றனர். இவரை ‘சிவ சிக்தி ஐக்கிய ரூபிணி’ என்றும் கூறுவர். ஸ்ரீ ராம கிருஷ்ணர்-சாரதா தேவியின் அவதாரத்தின் தொடர்ச்சி என்பார்கள் ராமகிருஷ்ணர் பாரம்பரியத்தில் வந்து அம்மாவிடம் சேர்ந்த பக்தர்கள்.

இவர்களில் பலரும் தம் தாய் மொழியிலேயே, சாமானியருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாகத் தமது உபதேசங்களை நல்குவர். ஆயினும் இவர்களது வாக்குகள் நமது பண்டைய சாத்திரங்களின் சாரமேயன்றி வேறில்லை என்பதை சான்றோர் அறிவர்.

Former President Abdhul Kalam with Amma (Mata Amritanandamayi)

இவர்களது எளிய மொழிகள் சிக்கலான சாத்திரங்களுக்கும் தெள்ளிய விளக்கங்களாக அமையும். அது மட்டுமல்லாது, கால தேச மாற்றங்களுக்கு ஏற்ப சனாதன மதத்தில் சில மாற்றங்களையும் புதிய பாதைகளையும் உருவாக்கித் தம் பக்தர்களை வழிநடத்துவர் இந்த அவதார புருஷர்கள்.

இவர்களில் சிலர் சுயம்புக்கள். அதாவது பிறவியிலிருந்தே ஞானம் பெற்றவர்கள். ஆயினும் அவதார புருஷர்கள் சிலர் தம் இளம் சாதனா காலத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வ ரூபத்தை பக்தி செய்தவர்களாகவும், ஒரு குறிப்பிட்ட ஆன்மீகப் பாதையைக் மேற்கொண்டவர்களாகவும் இருந்து தம் இறை நிலையை எத்தியதாகவும் நாம் அவர்கள் சரிதத்தில் காண்போம்.

ஆனால் நிறை நிலை பெற்ற அவர்கள் பெரும்பாலும் மதங்கள், உட்பிரிவுகள், சாதி, இன வட்டங்களின் எல்லைகளைக் கடந்து நின்று, அனைத்து வகை மக்களையும் ஈர்க்கும் ஓர் தெய்வீக அன்பின் வடிவங்களாகவே இருப்பார்கள். பல்வேறு ருசிகள், வாசனைகள், வேறுபாடுகளைச் சுமந்து கொண்டு தம்மிடம் வரும் அன்பர்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ற ஆன்மீக மார்க்கத்தைக் காட்டியருளுபவர்களாக விளங்குவார்கள். அறிவியலுக்கோ, பகுத்தறிவுக்கோ எட்டாத எத்தனையோ அற்புதங்களை இவர்கள் தம் பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டி தம்மைச் சரணடைந்தவர்களின் சிரத்தை, பக்தி, விசுவாசத்தைத் திடப்படுத்தி ஆன்மீக வாழ்வில் முன்னேற ஒளி நல்குவார்கள்.

பக்தர்கள்கள், ஆன்மீகத் தேடல் மிக்க சாதகர்களைத் தவிர, கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட சாமானிய மக்களும் கூட அவதார புருஷர்களால் பெரிதும் ஈர்க்கப் பட்டு வந்து அவர்களைச் சரணடைந்து, அவர்களின் அருளால் தம் உலகியல் வாழ்வில் வரும் கஷ்டங்கள், நோய்கள், பிரச்சனைகள், துக்கங்களுக்கு எளிதில் தீர்வுகாண்பார்கள். தாம் பெற்ற அத்தகைய அற்புதமான நிவாரணங்கள் மூலம் அவர்களது இறை நம்பிக்கை திடமாகி, அவர்களும் காலப் போக்கில் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் பக்குவம் பெறுவார்கள்.

கவனிக்க — ஞான மார்க்கத்தில் அவதாரம் எனும் பேச்சுக்கு இடமில்லை

நமது இந்து மதத்தின் அத்வைதக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஞான மார்க்கத்தில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு அல்ல. படைப்பில் உள்ள அனைத்துமே இறைவனே;  மாயையினாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டு ஜீவன் தன்னை இறைவனிடமிருந்து வேறாய் எண்ணும் அஞ்ஞானத்தினால் பேதத்தைக் காண்கிறான். அந்த அஞ்ஞானம் போனால், தான் இறைவனேயன்றி வேறில்லை என்பதை ஜீவன் உணர்வான். ஆக, நாம் எல்லாருமே அடிப்படையில் இறை சொரூபமே. ஆகவே எவரோ ஓரிருவர்தான் அவதார புருஷர்களாய் வருகிறார்கள் என்கிற கோட்பாடு ஞான மார்க்கத்தில் இல்லை! நாம் எல்லாருமே அவதாரங்கள் தான்!

ஆனால் (நான் வேறு இறைவன் வேறு) எனும் துவைத உணர்வை ஏற்கும் பக்தி மார்க்கத்தில் அவதாரம் ஓர் முக்கியமான விஷயமாகிறது. பக்தர்கள் இறைவனுடன் கூடி வாழ்ந்து அவன் லீலைகளைக் கண்டு ஆனுபவித்து ஆனந்திக்கும் பேறைத் தரவே இறைவன் அவதரித்து வருகிறான்.

அவதார புருஷர்களை எல்லோராலும் அடையாளம் காணமுடியாது

இறைவனின் மாயா விளையாட்டில் இதுவும் ஓர் முக்கியமான நிதர்சனமே!

இன்று நாம் இறையவதாரங்களான ராமரையும் கிருஷ்ணரையும் தெய்வமாகக் கொண்டாடினாலும், அவர்கள் அவதரித்த காலத்தில் அவர்களை எதிர்த்தவர்களும், விமரிசித்தவர்களும் அவதூறு பேசியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்!

பொதுவாகவே மிகப் பரவலாய் பலருக்கும் இறைவனை ஏதோ தொலை தூரத்தில் ஆகாயத்தில் ஒரு வைகுண்டத்திலோ, சுவர்க்கத்திலோ, பர மண்டலத்திலோ, கைலாயத்திலோ இருப்பதாக ஒப்புக்கொள்வது தான் எளிதாக இருக்கிறது. அடுத்தபடியாக,  இறைவனின் வெவ்வேறு ரூபங்களையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனித வடிவில் வாழ்ந்த அவதாரங்களான ராமரையும், கிருஷ்ணரையும் கோவில்களில் விக்கிரக வடிவில் கும்பிட்டு வணங்கிப் போவதே ஏற்புடையதாக இருக்கிறது. நிகழ் காலத்தில்,  நம்முள் ஒருவராக ரத்தமும் சதையும் கொண்ட மனித வடிவில்  ஒருவரை இறைவனாகக் காண்பது ஒப்ப முடியாமல் இருக்கிறது!

வரையறைக்கு உட்பட்ட தன் சிற்றறிவை வைத்துக்கொண்டு, மகாத்மாக்களை எடை போட்டு அவர்களை இழித்துப் பேசுவதும், அவதூறுகளைக் கூறுவதும், ஏமாற்றுப் பேர்வழிகள், பாமர மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்த்து முட்டாளாக்குபவர்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவர்கள், போலிச்சாமியார்கள் என்றெல்லாம் சொல்லியும் எள்ளி நகையாடுபவர்கள் பலர் உண்டு.

சமீப காலத்தில் வாழ்ந்து செத்துப் போன மகாத்மாக்களைக் கூட ஒரு வேளை ஒப்புக்கொண்டாலும் கூட,  உயிரோடு வாழும் அவதார புருஷர்களை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்!

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதாரங்கள்  பற்றிக் கூறும் கருத்துகள் மிக முக்கியமானவை

தம்மை ஓர் அவதாரமாக தம் அந்தரங்க பக்தர்களிடையே வெளிப்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறை அவதாரம் பற்றிப் பல பொன்னான கருத்துகளை  மிக எளிமையாகத் தம் உபதேசங்களில் தந்திருக்கிறார்.   அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்:

  • “அவதார புருஷர்களிடம் ஞானமாகிய சூரியனையும் பக்தியாகிய சந்திரனையும் ஒரே சமயத்தில் காண முடியும்.”
  • “இறைவனின் லீலைகளில் (திருவிளையாடல்களில்) , ஈசுவர லீலை,தேவ லீலை, நர லீலை, ஜகத் லீலை என்று பல லீலைகள் உள்ளன. நர லீலையில் (மனித லீலையில்)தான் அவதாரம் நிகழ்கிறது.”
  • “நித்தியம் யாருடையதோ, அவருடையதே லீலையும். பக்தர்களுக்காக லீலை. மனித வடிவில் பார்த்தால் தானே பக்தர்கள் அவரை நேசிக்க முடியும்?”
  • “இறைவன் மனிதர்களிடம் அதிகம் பிரகாசிக்கிறான்; இறைவனைத் தேடவேண்டுமென்றால், அவதார புருஷர்களிடம் தேட வேண்டும் . பசுவின் சாரம் அதன் பால்; பால் வேண்டுமென்றால் பசுவின் மடியில் தான் தேடவேண்டும். அவதார புருஷர்கள் பசுவின் மடியைப் போல.”
  • “அவதார புருஷர்களை அறிய விரும்பினால், இறைக் காட்சி பெற விரும்பினால் சாதனை அவசியம்”.
  • “ஞான ஆராய்ச்சி வழியில், இறைவனில் லீலை கனவு போல உண்மையற்றதாகி விடுகிறது; ‘நான்; எனும் எண்ணம் கூடப் பறந்துவிடுகிறது; இந்த வழியில் அவதாரம் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் இது மிகக் கடுமையான பாதை. பக்தர்களுக்கு உதவாது;  அதனால்தான் இறைவன் அவதரித்து பக்தியைக் குறித்து உபதேசிக்கிறார்; சரணடையச் சொல்கிறார்”.
  • “இறைவன் அவதார புருஷர்களிடம் தான் அதிகமாக வெளிப்படுகிறான்; எனவே அவதார புருஷர்கள் உடம்புடன் இருக்கும்போதே பக்தர்கள் அவர்களை வழிபட்டு சேவை செய்ய வேண்டும்”.
  • “இறைவன் மனிதனாக அவதரிக்குபோது அவரை [அந்த உருவில்] தியாயானிப்பது எளிதாகிறது. உடல் ஒரு திரை மட்டுமே. உள்ளே நாராயணன் உள்ளார். லாந்தர் விளக்கின் உள்ளே விளக்கு எரிவது போல்.”
  • “அவதார புருஷர்களை நினைப்பது, இறைவனை நினைப்பதே”.
  • “ராமன் இறையவதாரம் என்றால்  சீதையைப் பிரிந்தபோது அழுதாரே என்று கேட்கிறார்கள்.  பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடம்பை எடுத்து வந்தாலே, உடலுக்குள்ள பசி, தாகம் போன்ற பலவும் அவதார புருஷர்களுக்கும் இருக்கின்றன; ஏன், நோய், மனக்கவலை போன்றவை கூட இருக்கின்றன. அத்தகைய ஒருவரை அவதாரம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேட்கிறார்கள்.  இதற்கு “பஞ்ச பூதங்கள் எனும் வலையில் அகப்பட்டுக் கொண்டு பிரம்மமும் கண்ணீர் வடிக்கிறது” என்பது தான் என் பதில்”.

-=0()0=-

Loading

சில இந்து மத குருமார்கள், மடாதிபதிகள் கல்வி, மருத்துவம், தொழில் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களே? இந்துமதம் காட்டும் ஆன்மீகம் இதுவா என்ன?

இதற்கு விரிவான பதில் அளிக்கவேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்  ரூபாய் நாணயத்தைத் தொட முடியாதவராய் இருந்தார். தொட்டால் அவர் கை முறுக்கிக்கொள்ளும்! பரிபூரணத் துறவின் அடையாளமாக அவர் வாழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மிகப் பெரும் தாக்கம் எது என்று சாரதாதேவியாரைக் கேட்டபோது அவர் தந்த பதில் என்ன தெரியுமா?, “அவரது பரிபூரணத் துறவு!”

This image has an empty alt attribute; its file name is main-qimg-41827de82e06452a3fe08dbf5d750c20
அவரது பிரதான சீடர்தான் வீரத்துறவியான சுவாமி விவேகானந்தர். அவர் வெளிநாடுகளில் வேதாந்தப் பிரசாரம் செய்து, சுற்றி, பணம் சேர்த்து, உள்ளூரிலும் நன்கொடைகள் பெற்றுத்தான் ராமகிருஷ்ண மடத்தை ராமகிருஷ்ணரின் பிற்காலத்தில் தொடங்கினார்.

ஆன்மிகம், சமுதாயத் தொண்டு, கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் என்று அம் மடம் மிகப்பெரும்அளவில் விரிந்து பரந்தது. விவேகானந்தரின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி அன்னை சாரதாதேவியிடம் சிலர் புகார் போலச் சொன்னபோது அவர் சொன்னது, “நரேன் சரியாகத்தான் செய்கிறான்”!

This image has an empty alt attribute; its file name is main-qimg-39282edcd7bf0efbcc2bb1296219399e
ஆக, பாம்பின் கால் பாம்பறியும்.

காசையே கையால் தொட முடியாத ஓர் மகா அவதார புருஷரின் உள் வழிகாட்டலில் படியேதான் விவேகானந்தர் செயல் பட்டார். அது காலத்தின் கட்டாயம். இந்தியாவில் கிருத்துவ மதபோதகர்கள் கல்வி, மருத்துவ சேவை இவற்றை முன் வைத்து சாமானிய மக்களை ஈர்த்து மத மாற்றம் செய்து சநாதன தர்மம் நலிந்து போகும் சூழலில், இந்து மத மடங்கள் பழைய பஞ்சாங்க முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டிய காலச் சூழல் அது.

ஆன்மீகம், பக்தி, தியானம் சேர்ந்த ஆன்மீக சாதனைகளோடு கூடவே, அவற்றின் ஓர் அங்கமாக சமுதாயப் பணி செய்து, சாதிக்கொடுமைகளால் நலிபவரைக் கல்வியில் உயர்த்தி, ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, பசித்தவனுக்கு சோறு ஏற்பாடு செய்து, வெள்ளம், பஞ்சம் நிலநடுக்கம் என்று பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் நல்கி என்று கர்மயோகமாகச் செயல் படும் பெரும் மாற்றம் இந்து மதத்தில் வந்தது. அதுவும் இறை இச்சையே.

இப்படித் தான் காலா காலமாக இந்துமதம் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது வழக்கம். ஏதோ பூதம் உட்புகுந்ததுபோல ஊண், உறக்கம் பற்றிக் கவலைப் படாமல் ஓய்வின்றித் தேச நலனுக்காகச் செயல்பட்ட விவேகானந்தர், நாற்பது வயதிலேயே தம் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு உயிர் துறந்தார்.

அவர் சுகம் அனுபவிக்கவா வந்தார்? செல்வம் சேர்க்க, மடாதிபதியாய் கவுரமாக உலகை வலம் வரவா வந்தார்?

அவர் காட்டிய பாதை பிற்காலத்தில் ஓர் முன்னுதாரணமாயிற்று. ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அதேபோலவே மாபெரும் செயல்வீரராய் இருந்தார். ஆன்மீகமும் சமுதாயப் பணியும் ஒருங்கே பரப்பினார்.

ஆன்மீக சாதர்கர்களை உருவாக்கி, கூடவே சமுதாயப் பணிகளும் செய்யப் பணம் வேண்டும். அது முற்றிலும் நன்கொடைகளால் மட்டுமே வருவது தற்காலத்தில் சாத்தியம் அல்ல.

மாபெரும் சக்தியுடன் உலகுக்கு வரும் மகான்கள், தாங்கள் உயிரோடுஇருக்கும் குறுகிய காலத்துக்குள்ளேயே மாபெரும் செயல்பாடுகளில் முனைந்து, வியக்கத்தக்க வேலைகளைச் செய்து முடிக்கக் களத்தில் இறங்குகிறார்கள். அதற்கு ஏராளமான பணமும் வேண்டியிருக்கிறது. அவர்களின் அடிப்படை நோக்கு ஆன்மீக உணர்வைச் சாமானியரிடமும் வளர்ப்பது. அதற்கு வழி சமுதாய நலம் பேணுவது.

அதனால், வியாபார நோக்கோடு செயல்பாடுகள் செய்து அதில் வரும் பணத்தை சமுதாய நலன்களுக்குத் திருப்பி விடுவதே தற்கால மகான்களின் வழியாக ஆகியிருக்கிறது.

மகான்களின் பொது நோக்கான சங்கல்பத்துக்கு தீவிர சக்தியுண்டு. அவர்களின் அந்த ஆன்மீக சக்தியால் ஈர்க்கப்பட்டுப் பலரும் சுய நலம் மட்டுமே வாழ்க்கை என்பதிலிருந்து மாறி, ஆன்மீக வாழ்வுக்கு வருகிறார்கள். இந்த குருமார்களின் வழி காட்டுதலின் படி புலனடக்கம், எளிமை, தியாகம், ஜபம், தியானம் போன்ற ஆன்மீக சாதனைகளை மேற்கொள்வதோடு, உலக நலனுக்காகத் தன்னலமற்ற சேவையை உற்சாகத்துடன் செய்யவும் முன் வருகிறார்கள்.

ஓரு அரசாங்கமோ, அல்லது வெளிநாட்டிலிருந்து டாலர்கள் பெரும் ஒரு NGO வோ, சமுதாய நலனுக்கான ஓர் பெரும்பணியை ஏற்றெடுத்துச் செய்தால் 100 ரூபாய்க்கு 20, 30 ரூபாய் அளவுக்கே பலன் போய் சேரும். அதையே மாதா அமிர்தானந்தமயி, ஜக்கி வாசுதேவ் போன்ற, இறையருள் அகத்திலிருந்து இயக்குகின்ற ஆன்மீகவாதிகள் முன் நின்று அப்பணியைச் செய்யும்போது 65 முதல் 75 ரூபாயளவுக்கு பலன் விளையும். காரணம், சம்பளத்தை எதிர்பார்க்காமல் சேவையாய் முன்வந்து செய்யும் ஏராளமான பக்தர்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களுள் மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், கல்வியாளர்கள், குறிப்பிட்ட துறைகளில் விற்பன்னர்கள், பல் தொழில் புரிபவர்கள் எனப் பலரும் உண்டு. உலகியலைத் துறந்த துறவிகளும், பிரம்மசாரிகளும் உண்டு.

ஒருவர் மகானாகவே இருந்தாலும் மேற்கண்ட பக்தர்களைத் தவிர, இப்படிப்பட்ட பணிகளை சாமானியர்கள் மூலமும் தான் அவர்கள் பெருமளவில் செய்வித்தாகவேண்டும். சாமானியர்களில் நல்லவர்கள், சீடர்கள், பக்தர்கள், சேவகர்களும் இருப்பார்கள்; அயோக்கியர்கள், திருடர்கள், சுருட்டல் பேர்வழிகள் எல்லாரும் இருக்கத்தான் இருப்பார்கள். பக்தர், சீடர்களிலும் இன்னும் பழுக்காதவர்களும், அகங்காரம் பிடித்தவர்களும், தவறான புரிதல்களுக்கு உட்பட்டு விரயமாய்க் காரியங்கள் செய்பவர்களும் கூட இருப்பார்கள்.

நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியத்தான் செய்யும். அங்கு இங்கு மடை உடைந்து நீர் வீணாகவும் போகும். மகான்களும் உலகின் இந்த இயற்கையான மாயை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுத்தான் செய்கிறார்கள்; அப்படித்தான் வேலை செய்தாக வேண்டும்.

பணத்திற்கென்று ஒரு கெட்ட குணம் எப்போதும் உண்டு. பணம் ஏராளமாக வரும்போது, மாயையும் உடன் வரும். சாமானியரும் உட் புகுந்து சுருட்டப் பார்ப்பார்கள். ஆன்மீக தாகத்தோடு வந்தவர்களில் சிலர் கூட அந்தப் பணப்புழக்கம், பதவி, ஆடம்பர வேட்கை, புகழாசை என்று மயங்கித் திசை மாறியும் போவார்கள்.

சுவாமி சிவானந்தர் தம் மடத்தில் ஓர் ஆள் பணம் சுருட்டுகிறான் என்று தெரிந்தால் அவர் அதனை மன்னித்துவிட்டு மற்றவர்களிடம் சொல்வார், “ஒரு திருடன் மடத்துக்குள் இருந்தான் என்றால், வெளியுலகில் ஒரு திருடன் குறைவு என்று அர்த்தம். அவன் வெளியுலகத்தில் இல்லாமல் மடத்துள் இருப்பது நல்லதே. இங்கு ஆன்மீக சூழலில் இருந்தால் அவன் ஒரு நாள் திருந்துவான்; வெளியுலகில் அவன் தானும் கூடுதல் கெட்டுப்போய் சமுதாயத்துக்குக் கூடுதல் கெடுதியும் செய்வான்” என்பார்!

This image has an empty alt attribute; its file name is main-qimg-b50f15141f0624cd485c916a4aa635ad
ஒரு முறை அவர் ஆசிரமத்தில் கடன் பெருகிற்று; நன்கொடைகள் வறண்டது. ஆனாலும் அவர் சொன்னது: “நாம் இறைவனின் பணியைச் செய்கிறோம்; அவர் பணம் தருகிறார். பணம் உலகியரின் பாக்கெட்டில் உள்ளது; அவர்கள் தந்தால் பணிகளைத் தொடர்வோம்; இல்லையெனில் நாம் ஆரம்ப காலத்தில் எப்படி அன்னசத்திரங்களில் பிச்சை எடுத்து உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்தோமோ அதற்குத் திரும்புவோம். நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை” என்றார்.

மகாத்மாக்களின் நிலைப்பாடு அதுவே. செல்வத்தால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. அவர்கள் சாமானியத் தொழிலதிபர்கள் போல் அல்ல. மகான்களின் அகத்துறவு நிலை அப்படி. வெளியில் காணும் ஆடம்பரங்களை வைத்து ஒரு மகானை எளிதில் எடை போட்டுவிட முடியாது.

ஜக்கி வாசுதேவின் ஆசிரமம், வனப் பகுதியில் மரங்களை வெட்டியல்லவா வந்தது? எட்டிமடையில் அம்மாவின் அமிர்தா பல்கலைக் கழகம் பல ஏக்கர் பரப்பில் ஒருவித வனப் பகுதியில் அல்லவா விரிந்துள்ளது? என்றெல்லாம் பலரும் கேள்வியெழுப்புகிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is main-qimg-199c70c131802e2d3e38c70f2ffff75d
என் குரு அம்மா மாதா அமிர்தானந்தமயி சொல்வார்: ‘நீண்டகாலப் பலன் தரும் ஒரு பழ மரம் ஒன்று வேண்டுமானால், அதை நட்டுப் பயிரிட்டு, அது வளர்ந்து நிழல் பரப்பும் இடம் யாவிலும் உள்ள புதர்ச்செடிளும், சிறு செடிகளும் நசிக்கலாம். பெரிய நன்மைக்காக சில சிறிய தியாகங்கள் தவிர்க்க முடியாதவை”.

ஒரு காலத்தில் முட்செடிக்ளும் புதர்களும் அடர்ந்த வனமாக எட்டிமடைப் பகுதி இருந்தது. அதை விலைக்கு வாங்கிய பின்னும் கல்லூரிக்கு அரசு அனுமதி உடனே கிட்டவில்லை. அம்மா ஆசிரம பிரம்மச்சாரிகள் ஓரிரு ஆண்டுகள் அப்புதர்களையும் கருவேல மரங்களையும், அங்கு வாழ்ந்த பாம்பு தேள்களையும் அழித்துப் பதப் படுத்தி, ஏராளமான பழமரங்கள், பூ மரங்கள், நிழல் மரங்களை நட்டார்கள்.

பின்னர் அனுமதி கிட்டியது. பல்கலைக்கழகம் அங்கு வளர்ந்தது. அந்தப் பெரும் வளாகமே இன்று ஒரு பெரும் காடுபோல ஏராளமான மரங்களைத் தாங்கி சுற்று சூழலையே மேம்படுத்தியுள்ளது.

அங்கு வந்து படிப்பது என்பது பெரும் தொகை செலுத்த வசதியுள்ளவர்களுக்கே சாத்தியம். பல்கலைக் கழகத்தில் வசூலாகும் பணம், எத்தனையோ அம்மாவின் இலவச சமுதயப் பணிகளுக்கு மடை திருப்பி விடப் படுகிறது. உலகியல் கல்வியோடு சமுதாய நலப் பணிகளையும் மாணவர்கள் கற்றுப் போகிறார்கள் அங்கே. ஏராளமான தொழில் வாய்ப்புகளை சுற்றுவட்டார சாமானிய மக்களுக்கு அந்த பல்கலைக் கழகம் உருவாக்கித் தந்துள்ளது.

என் குருவான அம்மாவோ, அல்லது ஜக்கி வாசுதேவோ, கோடி கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு மடாதிபதிகளாய் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு அவர்கள் 18-20 மணி நேரம் சமுதாயத்துக்காகவே செயல் படுகிறார்கள். “கொடுத்துக்கொண்டே இரு” என்பதுதான் அவர்கள் செயல் பாடு.

This image has an empty alt attribute; its file name is main-qimg-3614cc2c03f3cd153404bb01707580e2
அவர்கள் உபயோகிக்கும் விலை மதிப்பு கூடிய வாகனங்களைப் பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பில் ரயில் பயணம் செய்து அவர்கள் செயல் பட்டால், அவர்கள் தம் நேரத்தையும் திறனையும் வீணடிப்பதேயாகும். அதற்கு பதில் சொகுசு வேனில் பயணிக்கையிலேயே உறங்கி ஓய்வெடுத்தால் மற்ற நேரங்கள் அவர்கள் தம் பணிக்காகச் மேலும் திறனாகச் செலவு செய்கிறார்கள் என்று பொருள். (மீண்டும் பெரிய பழ மரத்துக்காகப் புதர்களை வெட்டுவது என்பதை நினைவு கூறுங்கள்).

அவர்கள், பெரிய அளவில் விளம்பரத்துக்கு செலவழித்து வியாபாரம் செய்பவர்களைப் போல. விளம்பரம் செலவல்ல. அது ஒருவித முதலீடு. அதுபோல இம்மகான்கள் தம் செயல்பாடுகளில் நீங்கள் குற்றம் காண்பது போன்ற சில கூடுதல் பயண வசதிகள் போன்றவை வைத்திருந்தால் அவை மீண்டும் அவர்களின் சமுதாயப் பணிகளுக்கு முதலீடுகளே.

“நான் வெளியுலகம் அறியாமல் 10 பேருக்கு உதவ வேண்டுமா அல்லது விளம்பரம் செய்து 1000 பேருக்கு உதவவேண்டுமா என்றால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்” என்பார் சுவாமி சிவானந்தர்.

அது தான் தற்கால மகான்களின் செயல்பாடு.

போன வாரம் மாதா அமிர்தானந்தமயியின் 66ஆவது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் வந்திருந்தார். எதற்கு இத்தனை ஆடம்பர விழாக்கள்?

This image has an empty alt attribute; its file name is main-qimg-0c55004b4b2e9b00476ce0037d37b0b1
அதைத் தெரிந்துகொள்ள, அவரது ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அறிமுகப் படுத்தப் படும் பெரும் சமுதாய நலத் திட்டங்கள் பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.

4 ஆம் வகுப்பு தாண்டாத, ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த ஓர் கிராமத்து பெண் தம் 66 ஆண்டுகால வாழ்க்கையில் சாதித்துள்ளவைகளை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. அதைத் தெரிந்துகொண்டால் தற்கால ஆன்மீகவாதிகளின் போக்கு புரியும்.

அதைத் தெரிந்துகொள்ள ஓர் கால் மணி நேரம் செலவழியுங்கள்:

ஆன்மீகம் மேலோட்டமானது அல்ல. அதை ஆழ்ந்து அறிந்தே புரிந்துகொள்ள முடியும்.

தங்க நகைகள் பிரபலமாகும் போது கில்ட்டு நகைகளும் வரத்தான் செய்யும். ஆங்காங்கே போலி ஆன்மீகவாதிகளும் வரத்தான் செய்வார்கள். பக்கா ஏமாற்றுக் காரர்களும் வரலாம். அதுவும் இறைவனின் மாயையில் ஓர் அம்சமே.

நமக்குப் பரிச்சயமான ஒரு லிட்டர் குவளையை மட்டும்வைத்துக்கொண்டு ஏரித்தண்ணீரையே அளந்து தீர்ப்பளிக்கிறேன் என்று சொல்வது சரியல்ல.

Loading

Why do some believe that ordinary persons like Mata Amritanandamayi or Sai Baba have extraordinary powers?

To answer this question, one must essentially delve deeper into the concept of Avatar in Hinduism. One must also try to understand the concept of Advaita in Hinduism. One must be able to grasp the grandest statement of Hinduism that everyone has the potential to attain Godliness. You may say, all these are essentially beliefs and say, “I can’t believe unless ‘scientifically proved’ ” , we will come to some amount of proving a bit later.

According to Hinduism, God takes up human form and comes to live among us to teach us the right dharma and show the way for spiritual advancement for earnest seekers from time to time. They also annihilate evil forces that tend to tilt the balance towards adharma and restore dharma — It is the Avatar.

Avatars, though by looks and physical behaviour will be like a human beings, they are NOT just ordinary mortals. So, fundamentally, Satya Saibaba and Mata Amritanandamayi are NOT just ordinary people. They are avatars.

The way they lead their lives, the way they demonstrate super-human capabilities right from childhood, the way they influence people who are truly attracted towards them through faith and surrender, the way they make miraculous changes in the lives of people (either overtly or covertly), the way they accomplish unbelievable tasks within unbelievable time-frame, the way they spread love and care on humanity cutting across all caste, creed and religious barriers, the way they create a massive revival of spirituality — are all beyond the comprehension of ordinary mortals.

Those who are skeptical,who think they are very rational, think they know all about human beings and God, think they are “scientifically oriented” , who declare themselves proudly as non-believers by closing their ears, eyes, nose, mind and heart and declare “No — these Godmen and Godwomen are all only frauds bent upon cheating and looting people” can only be deluding themselves from reality.

Now coming to the proof.

Thousands of personal experiences can be given by people who experienced changes in their lives by coming to Amma or Satya Sai. You will say “these are concocted stories spread by blind believers in vested interest”.

Just set aside some 20 minutes of your time by keeping your eyes and heart open and go through the following link that contains the historical record of what Mata Amritanandamayi has done in each and every year of her living in this world amidst us in the past 64 years:

Life Timeline of Amma (Mata Amritanandamayi) – with images

Some of the happenings are deeply spiritual about which I am sure you will not be inclined to even learn/digest. But there are also things done to the world. There are records and proofs. Then come to your own conclusion:

How are the grandest tasks accomplished?

They are accomplished by believers’ dedication and hard work; through the money people donate willingly; through the fees collected from institutions; through selling of products and services that the believing devotees (consisting doctors, scientists, teachers, professors, doctorates, engineers, pharmacists, writers, publishers, technicians, artisans, labourers and so on) contribute with love and dedication. A considerable percentage of the services are voluntary.

After all, people who do all these works (as instruments of the avatar) are human beings with their own limitations, deficiencies and inefficiencies too. So, along the side of grand things happening, you will also find some shortfalls, some imperfections, some little blunders and some wastages here and there. But if you look at the macro picture, the negatives will not too big. It is also a part of the divine maya. Nothing is 100% perfect in creation.

Loading

What is Love? Where is love? How does love work? Does true love exist?

What is Love?

Love is an emotional feeling of attraction, closeness, intimacy, strong liking, and source of enjoyment to be together with someone or something.

Love can take different forms with different things and beings. Examples:

“I love coffee”; “I love my new dress” : “I love my native place” – these are to do with things.

“I love Ilayaraja songs; I love watching thriller movies”  – these are to do with abstract things.

“I love my dog”; “I love my cat”  — these are to do with living beings other than humans.

“I love my friend”; “I love the comedian Vadivelu” – these are to do with third persons

“I love my cousin brother; I love my brother in law” – These are to do with distant relatives.

“I love my mother/ sister/ son/ daughter/brother/ grandfather” – these are to do with blood relatives.

“I love that girl; I love that boy” – these are to do with a specific person of opposite sex with a marital or sexual intent in mind.

“I love my husband/ wife” – these are to do with existing intimate relations

“I love Lord Shiva; I love Lord Krishna” – this is bhakti – devotion to God.

It is quite obvious that the intensity of love, the reverberation of the joyful feeling that love generates is not same in the various categories of love that we saw above.

The love a boy develops on his girlfriend is not of the same frequency or intensity as the love the boy has on his sister. The love one has on his father is not same as the love one has on the pet dog. Strange it may seem, but the present day truth is that many people are able to love their pet dogs better than their fathers!

When it comes to love, all of us are both givers as well as receivers.  All of us, with varying degrees of intensity, are capable of giving love and receiving love. No one can constantly be giving love without getting back any love in return. No one can keep on receiving love without giving something back. Think of it: If pet dogs don’t reciprocate any love, no one will ever keep them at home!

What is the source of Love?

Where from does love spring? Why at all does a person express love to another? Why does a wife love her husband? Why do parents love their children?

According to Sanatana Dharma, God is the in-dweller in all beings. God permeates the entire creation. Even though each of us seem to have different personalities, our Self – Atman is one. It is like different beads of a necklace strung together in a single thread. It is like a single sun reflecting in hundred pots of water. Atman is that thread; Atman is the sun. Atman is Sat-chit-ananda – Existence-knowledge-bliss. It is the bliss of the atman that gets expressed in the form of love.

In the Hindu scripture Brihadarayanka Upanishad, The saint Yagnyavalkya says

 ‘A wife loves her husband not for his sake, but for the sake of her own Self…… …..

The above are excerpts from the eBook  “What is Love? Where is True Love?”

To read the full eBook,

https://www.amazon.com/dp/B0B54VYSJL

Loading

What does Amma (Mata Amritanandamayi) say, as a woman saint, on the matter of allowing young women to Sabarimala Ayyappa temple?

Mata Amritanandamayi is a highly respected woman saint in Kerala with a huge following, who is popular across the globe for her expression of universal love and her social and philanthropic activities. She has been contributing in many ways, both spiritually and socially, in removing the inequalities that women have been facing.

As a woman saint, her viewpoint on this sensitive subject of allowing women into Sabarimala carries weight and requires a serious study. Below is the English translation of her Malayalam talk on this subject:

“In fact, there is no bar for ladies to visit and worship at Sabarimala temple and many ladies are indeed visiting and having darshan of lord at Sabarimala. The only thing is that as part of the procedures of austerity stipulated for devotees visiting Sabarimala, there is restriction for women of a specific age group to visit the place.

In Amma’s conception, God is beyond the distinctions of man and woman. But when we consider ‘God’ as a principle and God as a formally consecrated ‘deity’ in a temple, there is subtle difference that we must take into account. God is indeed an infinite consciousness. But a deity inside a temple is not exactly same.

There is a difference between the two — like the difference between fish in the seas and the ornamental fish carefully nurtured at homes in the glass tanks. If you don’t feed food at proper intervals for the fish in the tank, they cannot be sustained. But we don’t have to bother about feeding the fish in the seas; In the same way, for formerly consecrated temple deities, we have to conduct daily pujas, offer sanctified food, do special pujas on special occasions as per prescribed norms in the Shastras or else, the divine consciousness existing in the deities would get deteriorated.

On the other hand, God as an omnipresent and omniscient entity will not get affected anyway whether formal worship is done to Him or not.

Just like the different fish types in the glass tank require provision for oxygen and feeding of specifically formulated fish food, different deities in temples require different and specific mantras for worship and procedures for cleanliness and purity to be maintained in the temple. The mantras meant for a smiling deity would be different from the mantras of the same deity conceived in an expression of anger (rowdra bhava). Even though the same divine power permeates everywhere, the specific ways and practices in which the deities in specific temples have been conceived are different.

With regard to Sabarimala, the faith of the devotees of Lord Ayyappa is that the rules and procedures of austerities prescribed for the temple are based on the wish of Lord Ayyappa who undertook penance in the hills as a ‘Nitya Brahmachari’ (ever celibate) and prescribed the regulations before he entered into samadhi. It is based on this belief that ‘Malikappurathamma’ is still waiting outside and those devotees who follow the prescribed austerities and procedures can visit and have a darshan of the lord.

Since devotees follow such a strict regimen (including sense control) , it is not right to demand that young women should be permitted entry in to Sabarimala and olden practices and rules should be changed accordingly.

It is not right to demand that all the temple conventions should be thrown to dust. Such practices and conventions are like pillars holding the dharma.

If at all there is a such a need for change, actually it is the women, who are ardent devotees of Lord Ayyappa, are the ones to state their stand on this matter. After getting such an opinion, let the Government, temple shastra pundits and the priests sit together, discuss it and come to a decision. If there is really a need, then rules may be reviewed and changed; but is should not end up like bathing a child repeatedly for cleanliness with water and then throwing away the remnant water along with the child!”

Loading