Posts

The Role of Sri Ramakrishna in the revival of Sanatana Dharma (Tamil)

பாரத சனாதன தர்மம் புத்துயிர் பெற்றதில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெரும் பங்கு

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு மகாத்மா மாத்திரமல்ல, அவர் ஒரு அவதார புருஷரும் கூட. தனது நெருங்கிய பக்தர்களுக்கு, தாம் ஒரு அவதாரம் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்து மதத்தில், அவரைப் பெரிதும் போற்றுவதற்கான பல காரணிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்கே சுருக்கமாகக் காண்போம்:

  • அவர் வாழ்ந்த காலத்தில் (1836–1886) நம்மை ஆண்டு கொண்டிருந்த இருந்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் காரணமாய் மேற்கத்திய / கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்திருந்த நமது சனாதன தர்மத்துக்குப் புத்துயிர் தந்த மகான்களில் அவர் முக்கியமான ஒருவராக இருந்தார்.
  • இந்து மதத்தில் உள்ள பன்முகப்பட்ட மார்க்கங்களும் — அதாவது பக்தி மார்க்கம் (அதில் பல கடவுள் வடிவங்களை வணங்குவது உட்பட), ஞான மார்க்கம் (ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தில் முடிவுறும் அத்வைத தத்துவம்), யோக மார்க்கம் (பதஞ்சலி முனிவர் காட்டும் அஷ்டாங்க யோகம்), குண்டலினி யோகம் (தாந்திர மார்க்கம்) — என்று எல்லாமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு முறைமைகளே, அவையெல்லாமே உண்மையானவையே என்று உலகத்துக்கு நிரூபிக்கும் ஓர் முன்னுதாரண புருஷராக அவர் வாழ்ந்து காட்டினார். தீவிர நம்பிக்கையோடும் சிரத்தையொடும் ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து முழுமனதுடன் சாதனை செய்தால் அவ்வவ் வழிகளின் மூலம் பூரணத்துவத்தை அடையமுடியும் என்பதை அவர் பறைசாற்றினார்.
  • அவர் வாழ்ந்த காலகட்டத்தில், தாந்திர மார்க்கம் என்பது மிகவும் இரகசியமாக இருந்த ஓர் ஆன்மீகப் பாதையாக இருந்தது. பலரும் தவறான நோக்கங்களுக்காகத் அந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஓர் நிலைமை வங்காளத்தில் காணப்பட்டது. தன்னுள்ளேயே சிவ-சக்தி ஐக்கியத்தை அனுபவித்து அடைவதற்கான வழிமுறை என்கிற போர்வையில், நெருக்கமான ஆண்-பெண் உறவோடு தொடர்புடைய சடங்குகளைச் செய்யவும் ,மீன், மது, மாமிசம் இவற்றைக் கூடுதல் சுகிக்கவும் தந்திரம் வழி கோலியது.ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த பாதையிலும் துணிந்து இறங்கினார். வயதில் மூத்த பெண் குருவான பைரவி பிராமணயின் நேரடி வழிகாட்டுதலின்படி தாந்திரீகத்தின் கடுமையான நடைமுறைகளைப் பயின்று சாதனைகள் செய்து மிக உயர்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.
  • இந்த சுய அனுபவத்தின் அடிப்படையில் அவர், ‘(பலராலும் கண்டிக்கப்பட்ட) தந்திரம் கூட கடவுளை அடைவதற்கான ஒரு பாதைதான்’ என்று அறிவித்தாலும், அதை தனது சீடர்களுக்கு ஒரு சாதனா மார்க்கமாகப் பரிந்துரைக்கவில்லை. பெரும்பாலான மக்களுக்கு அந்த பாதையில் சென்று உயர்நிலையை அடைவதைவிட விட வீழ்ச்சியடையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரித்தார்.
  • அவரது அடிப்படை மனப்பாங்கிலும், ஆன்மீக ருசியிலும் அவர் ஒரு தேவி/ காளி உபாசகராகவே இருந்தார். அவரது ஆன்மீக சாதனா காலங்களின் தொடக்கத்தில் தட்சிணேஸ்வர் பவதாரிணி காளி கோவிலில் பூசாரியாகப் பொறுப்பேற்று) தீவிரமான தபஸ் செய்து, பவதாரிணியின் தரிசனம் பெற்றார். தேவி அவருள் ஐக்கியமானாள். அது முடிந்த பின் அவர் வங்காள வைணவ மார்க்கத்தைக் கடைப்பிடித்து ராதா-கிருஷ்ண பக்தியில் தோய்ந்தார். ஸ்ரீ ராமர், தேவி சீதா, கிருஷ்ணர், ராதா, அனுமன் போன்ற பல தெய்வங்களின் தரிசனங்களைப் பெற்றார். இந்த கடவுள் வடிவங்கள் அனைத்தும் நிச்சயமாக தமக்குள்ளேயே இருப்பதை அவர் உணர்ந்தார்.
  • தோதாபுரி எனும் அத்வைத ஞானியின் சீடராக ஆகி, நாம ரூபங்களைக் கடந்த இறைவனைத் தியானிக்கும் முறைமை பயின்று, நான்-நீ எனும் இரட்டையைக் கடந்து சச்சிதானப் பிரம்மத்தில் ஒன்றாகிவிடும் நிர்விகல்ப சமாதி அனுபத்தைப் பெற்றார்.
  • இந்து மதத்தின் பல்வேறு பாதைகள் மூலமும் இறை அனுபவத்தை ருசித்த அவர், இஸ்லாம் (ஸூஃபி) மற்றும் கிறிஸ்தவ மத மார்க்கங்களிலும் சாதனைகள் செய்தார். அந்த பாதைகளும் கடவுளை அடைவதற்கு வழிவகுக்கும் என்பதை அவர் அனுபவபூர்ணமாக உணர்ந்தார்.
  • இத்தகைய பல்வேறு வகைப்பட்ட சாதனா முறைகளின் மூலம் அறுதி உண்மையை உணர்ந்த அவர் “எத்தனை மதங்களோ, அத்தனை வழிகள்” என்று அறிவித்தார்.அவர் விஷ்ணுவின் பக்தர்களிடையே ஒரு வைணவராக இருந்தார்; தேவியின் பக்தர்களுக்கு மத்தியில் ஒரு சாக்தராக இருந்தார்; அவர் இயேசுவின் வழிபாட்டாளர்கள் மத்தியில் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அத்வைதிகளுக்கு மத்தியில் அவர் ஒரு ஞானியாக இருந்தார். யோகிகளின் பார்வையில் அவரும் ஒரு யோகி.வெவ்வேறு மாறுபட்ட மத நம்பிக்கை, இஷ்ட தெய்வ நம்பிக்கை, பல்வேறு பட்ட ஆன்மீக ருசிகள் இவற்றைச் சுமந்து கொண்டு ஆன்மீக வழிகாட்டலை நாடி அவரைச் சந்திக்கும் பேறு பெற்ற ஒவ்வொருவரும், ‘அவர் தங்களுடையவர்’ என்று நினைக்கும் விதத்தில் அவரவர் பக்குவம், மனப்பாங்குக்கு ஏற்ப, அவர்வர் நம்பிக்கையைக் குலைக்காமல் எளிமையான ஆன்மீக உபதேசங்கள் தந்து அவர் வழிகாட்டினார்..
  • “பெரும்பான்மை மக்களுக்கு ஏற்றது பக்தி மார்க்கமே’ என்றே அவர் உபதேசித்தார். அவரவர் தம் இஷ்ட தெய்வத்தை முழுமனதுடன் பக்தி செய்வதன் மூலமே பூரணத்துவம் அடையமுடியும் என்று அவர முன்மொழிந்தார்.
  • தீவிர ஆன்மீக நாட்டத்தோடு கடவுளை அடைய முனையும் சாதகர்களுக்கு ‘காமினி மற்றும் காஞ்சனப் பற்றுதான் (அதாவது பெண்ணாசையும், பணத்தாசையும் தான்) இரு பெரும் தடைகள் என்றார் அவர். இவ்விரண்டையும் கைவிடாமல், ஆன்மீக ரீதியில் வெற்றி பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்று அவர் உறுதியாக, ஒளிவு மறைவின்றி, அலுக்காமல் உபதேசித்தார்.
  • அவர் திண்ணைப்ப் பள்ளிக்கூடத்தில் அடிப்படையாய் எழுதப் படிக்கக் கற்றதைத் தவிர வேறு ஒன்றும் படித்ததில்லை. பரம எளிமையான, கள்ளம் கபடமில்லாத ஓர் பிராமணர் அவர். அவர் பேசியதெல்லாம் சாமானிய கிராமத்து மக்கள் பேசும் எளிய வங்காள மொழி மட்டுமே. அவர் தம் கையால் பணம் காசை நிஜமாகவே தொடமுடியாத ஓர் நிலையில் இருந்தார். நாளைக்கு என்று எதையும் சேர்த்துவைக்கும் மனோ நிலை இல்லாதவராகவும் இருந்தார்.
  • தமது 24 ஆவது வயதில் ஐந்து வயது சாரதையை அவர் மணந்தார். சாரதை வயதுக்கு வந்து, தம் பதினெட்டாவது வயதில் கணவரோடு சேர்ந்து வாழ (ராமகிருஷ்ணர் தங்கி வாழ்ந்த) தட்சிணேசுவரக் கோவில் வளாகத்துக்கு வந்து சேர்ந்தார். அவளிடம் அவர், “இந்தக் கோவிலில் உறையும் பவதாரிணி காளியும், இங்கே ‘நகபத்’தில் (வாத்திய மண்டபத்தில்) வாழும் என் தாயும், நீயும் ஒன்றே” என்று சொல்லி, அவளும் நகபத்தில் தங்கி வாழ ஏற்பாடு செய்தார். காம உணர்வும் உறவும் ஏதுமின்றி ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து ஓர் உயரிய ஆன்மீக வாழ்க்கை வாழ முடியும் என்கிற ஓர் அற்புதமான முன்னுதாரணத்தை உலகுக்குத் தரும் விதத்தில் அவர்களது வாழ்க்கை அமைந்தது.
  • 12 ஆண்டுகாலம் பல்வேறு ஆன்மீக மார்க்கங்களின் வழி சாதனைகள் செய்து இறையானுபவத்தை எல்லா மார்க்கங்களின் வழியேயும் அடைந்த ராமகிருஷ்ணர் உலகிற்கு உபதேசிக்கத் தயார் ஆனார். ஆனால் சீடர்கள் எங்கே? அவர் தமக்கான சீடர்களை அனுப்பி வைக்குமாறு அன்னை காளியிடம் அழுது பிரார்த்தித்தார். அப்போது ஒவ்வொருவராய் அவரது இளம் சீடர்கள் – உலகியற் கல்வி படித்து, அதே சமயம் ஆன்மீக சம்ஸ்காரங்களோடு இறைவனைத் தேடும் இளைஞர்கள் அவரை நாடி வர ஆரம்பித்தார்கள். அவ்வாறே இல்லற பக்தர்களும். பலரும் அவரை நாடி வந்தாலும் அவரது “உள் வட்டத்து’ பக்தர்களும் சீடர்களுமாய், அவரை அவதார புருஷராக உணர்ந்து அடிபணிந்தவர்கள் சுமார் 33 பேர்கள் தாம்.
  • அவர் எப்போதும் கடவுளைப் பற்றியும், இறையானந்தத்தைப் பற்றியும், பக்தி, ஞானம், யோகம், ஆன்மீக சாதனைகள் இவை பற்றியுமே தம்மை நாடி வந்தவர்களிடம் வாய் ஓயாமல் பேசினார். அவர் பேசியதெல்லாம் பரம எளிமையான மொழிகள். அன்றாட வாழ்க்கை உதாரணங்கள் மூலமும், குட்டிக் கதைகள் மூலமும் அவர் ஆன்மீகத்தை உபதேசித்தார். பகவத் கீதை, உபநிடதங்கள் எல்லாம் படித்தும் தத்துவம் புரியாத பண்டிதர்களும் கூட, சம்ஸ்கிருதம் ஏதும் அறியாத பாமரரான அவரது அடி பணிந்து அவர் தரும் எளிய அனுபவ விளக்கங்கள் மூலம் ஞான ஒளி பெற்றனர்.
  • ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் அவர் வாழ் நாள்கழிந்த பிறகே வெளியுலகம் பரவலாக அறியும் வகையில் தான் அவரது அவதார நாடகம் அரங்கேறியது. அவர் தமது 50 ஆவது வயதில், தொண்டையில் வந்த புற்றுநோயின் காரணமாய் உடலை உகுத்தார்.
(மேலே படத்தில்:ஊணுறக்கம் துறந்து கடுந்தவத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணரின் துறவிச்சீடர்கள்)
  • சுவாமி விவேகானந்தரின் தலைமையில் ராமகிருஷ்ணரின் 16 சீடர்கள் உலக வாழ்வைத் துறந்து சன்யாசம் மேற்கொண்டனர். அவர் காலமான பிறகு பரம எளிமை வாழ்க்கையை மேற்கொண்டு அவர் காட்டிய வழியில் கடும் தவம் செய்தனர். ராமகிருஷ்ணர் காலத்துக்குப் பிறகு சுமார் 34 ஆண்டுகள் சாரதா தேவியார் உயிர் வாழ்ந்தார். அவரது தெய்வீகமான அருளும், ஆதரவும் ராமகிருஷ்ணர் உருவாக்கிய துறவியர் சங்கத்தை வழி நடத்தின. ராமகிருஷ்ணர் காலமான பிறகு பல ஆண்டுகள் கழித்தே ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது.
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தொடக்கம் முதலே துறவும் தொண்டும் அம்மடத்தின் இரு கண்கள் ஆகின. பாரத துறவியர் மடங்கள் சமுதாயத் தொண்டு ஆற்றுவதை மடத்தின் செயல்பாடாகக் கொண்டுவந்த முன்னோடி சுவாமி விவேகானந்தர். அதற்கு அவருக்கு உத்வேகம் அளித்தது அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் : “உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும் இறைவனே என்று கண்டு இறைவனுக்கு செய்யும் சேவையாக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்”.
  • சாத்திரங்களின் சாரத்தையெல்லாம் உள்ளடக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் பரம எளிமையானவை; அவையெல்லாம் அவரது காலத்துக்குப் பிறகே வெளியுலகம் அறிய வந்தது. அப்பணியைச் செய்ய ராமகிருஷ்ணர் தெரிந்தெடுத்து வைத்திருந்தவர் “ம-” எனும் புனைப்பெயரில் அறியப்படும் ஸ்ரீ மகேந்திரநாத் குப்தா எனும் ராமகிருஷ்ணரின் இல்லற சீடர் ஆவார். அவர் ராமகிருஷ்ணரின் உரையாடல்களை டயரிக் குறிப்புகளாக (ராமகிருஷ்ணரின் ஜீவ காலத்தின் கடைசி ஐந்து வருடங்களில்) எழுதி வைத்திருந்தார்.
ஸ்ரீ மகேந்திரநாத் குப்தா (ம-)
  • அவர், அவற்றை அவர் பிற்காலத்தில் விரிவாக்கி, “ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதம்” எனும் தலைப்பில் 5 புத்தகங்களாக வங்காள மொழியில் வெளியிட்டார். இவ்வரிய பொக்கிஷமாகிய நூல், ஆங்கிலம் (“The Gospel of Sri Ramakrishna”) உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் இது “ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்கிற பெயரில் 3 பாகங்களாகக் கிடைக்கிறது. இப்புத்தகம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள தீவிர ஆன்மீக சாதகர்கள் மத வேறுபாடின்றி இன் நூலைப் படித்து மிக எளிமையாக இந்து மதத்தின் ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்து கொள்கிறார்கள்.

Loading

சில இந்து மத குருமார்கள், மடாதிபதிகள் கல்வி, மருத்துவம், தொழில் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களே? இந்துமதம் காட்டும் ஆன்மீகம் இதுவா என்ன?

இதற்கு விரிவான பதில் அளிக்கவேண்டும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்  ரூபாய் நாணயத்தைத் தொட முடியாதவராய் இருந்தார். தொட்டால் அவர் கை முறுக்கிக்கொள்ளும்! பரிபூரணத் துறவின் அடையாளமாக அவர் வாழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மிகப் பெரும் தாக்கம் எது என்று சாரதாதேவியாரைக் கேட்டபோது அவர் தந்த பதில் என்ன தெரியுமா?, “அவரது பரிபூரணத் துறவு!”

This image has an empty alt attribute; its file name is main-qimg-41827de82e06452a3fe08dbf5d750c20
அவரது பிரதான சீடர்தான் வீரத்துறவியான சுவாமி விவேகானந்தர். அவர் வெளிநாடுகளில் வேதாந்தப் பிரசாரம் செய்து, சுற்றி, பணம் சேர்த்து, உள்ளூரிலும் நன்கொடைகள் பெற்றுத்தான் ராமகிருஷ்ண மடத்தை ராமகிருஷ்ணரின் பிற்காலத்தில் தொடங்கினார்.

ஆன்மிகம், சமுதாயத் தொண்டு, கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் என்று அம் மடம் மிகப்பெரும்அளவில் விரிந்து பரந்தது. விவேகானந்தரின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி அன்னை சாரதாதேவியிடம் சிலர் புகார் போலச் சொன்னபோது அவர் சொன்னது, “நரேன் சரியாகத்தான் செய்கிறான்”!

This image has an empty alt attribute; its file name is main-qimg-39282edcd7bf0efbcc2bb1296219399e
ஆக, பாம்பின் கால் பாம்பறியும்.

காசையே கையால் தொட முடியாத ஓர் மகா அவதார புருஷரின் உள் வழிகாட்டலில் படியேதான் விவேகானந்தர் செயல் பட்டார். அது காலத்தின் கட்டாயம். இந்தியாவில் கிருத்துவ மதபோதகர்கள் கல்வி, மருத்துவ சேவை இவற்றை முன் வைத்து சாமானிய மக்களை ஈர்த்து மத மாற்றம் செய்து சநாதன தர்மம் நலிந்து போகும் சூழலில், இந்து மத மடங்கள் பழைய பஞ்சாங்க முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டிய காலச் சூழல் அது.

ஆன்மீகம், பக்தி, தியானம் சேர்ந்த ஆன்மீக சாதனைகளோடு கூடவே, அவற்றின் ஓர் அங்கமாக சமுதாயப் பணி செய்து, சாதிக்கொடுமைகளால் நலிபவரைக் கல்வியில் உயர்த்தி, ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, பசித்தவனுக்கு சோறு ஏற்பாடு செய்து, வெள்ளம், பஞ்சம் நிலநடுக்கம் என்று பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் நல்கி என்று கர்மயோகமாகச் செயல் படும் பெரும் மாற்றம் இந்து மதத்தில் வந்தது. அதுவும் இறை இச்சையே.

இப்படித் தான் காலா காலமாக இந்துமதம் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது வழக்கம். ஏதோ பூதம் உட்புகுந்ததுபோல ஊண், உறக்கம் பற்றிக் கவலைப் படாமல் ஓய்வின்றித் தேச நலனுக்காகச் செயல்பட்ட விவேகானந்தர், நாற்பது வயதிலேயே தம் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு உயிர் துறந்தார்.

அவர் சுகம் அனுபவிக்கவா வந்தார்? செல்வம் சேர்க்க, மடாதிபதியாய் கவுரமாக உலகை வலம் வரவா வந்தார்?

அவர் காட்டிய பாதை பிற்காலத்தில் ஓர் முன்னுதாரணமாயிற்று. ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அதேபோலவே மாபெரும் செயல்வீரராய் இருந்தார். ஆன்மீகமும் சமுதாயப் பணியும் ஒருங்கே பரப்பினார்.

ஆன்மீக சாதர்கர்களை உருவாக்கி, கூடவே சமுதாயப் பணிகளும் செய்யப் பணம் வேண்டும். அது முற்றிலும் நன்கொடைகளால் மட்டுமே வருவது தற்காலத்தில் சாத்தியம் அல்ல.

மாபெரும் சக்தியுடன் உலகுக்கு வரும் மகான்கள், தாங்கள் உயிரோடுஇருக்கும் குறுகிய காலத்துக்குள்ளேயே மாபெரும் செயல்பாடுகளில் முனைந்து, வியக்கத்தக்க வேலைகளைச் செய்து முடிக்கக் களத்தில் இறங்குகிறார்கள். அதற்கு ஏராளமான பணமும் வேண்டியிருக்கிறது. அவர்களின் அடிப்படை நோக்கு ஆன்மீக உணர்வைச் சாமானியரிடமும் வளர்ப்பது. அதற்கு வழி சமுதாய நலம் பேணுவது.

அதனால், வியாபார நோக்கோடு செயல்பாடுகள் செய்து அதில் வரும் பணத்தை சமுதாய நலன்களுக்குத் திருப்பி விடுவதே தற்கால மகான்களின் வழியாக ஆகியிருக்கிறது.

மகான்களின் பொது நோக்கான சங்கல்பத்துக்கு தீவிர சக்தியுண்டு. அவர்களின் அந்த ஆன்மீக சக்தியால் ஈர்க்கப்பட்டுப் பலரும் சுய நலம் மட்டுமே வாழ்க்கை என்பதிலிருந்து மாறி, ஆன்மீக வாழ்வுக்கு வருகிறார்கள். இந்த குருமார்களின் வழி காட்டுதலின் படி புலனடக்கம், எளிமை, தியாகம், ஜபம், தியானம் போன்ற ஆன்மீக சாதனைகளை மேற்கொள்வதோடு, உலக நலனுக்காகத் தன்னலமற்ற சேவையை உற்சாகத்துடன் செய்யவும் முன் வருகிறார்கள்.

ஓரு அரசாங்கமோ, அல்லது வெளிநாட்டிலிருந்து டாலர்கள் பெரும் ஒரு NGO வோ, சமுதாய நலனுக்கான ஓர் பெரும்பணியை ஏற்றெடுத்துச் செய்தால் 100 ரூபாய்க்கு 20, 30 ரூபாய் அளவுக்கே பலன் போய் சேரும். அதையே மாதா அமிர்தானந்தமயி, ஜக்கி வாசுதேவ் போன்ற, இறையருள் அகத்திலிருந்து இயக்குகின்ற ஆன்மீகவாதிகள் முன் நின்று அப்பணியைச் செய்யும்போது 65 முதல் 75 ரூபாயளவுக்கு பலன் விளையும். காரணம், சம்பளத்தை எதிர்பார்க்காமல் சேவையாய் முன்வந்து செய்யும் ஏராளமான பக்தர்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களுள் மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், கல்வியாளர்கள், குறிப்பிட்ட துறைகளில் விற்பன்னர்கள், பல் தொழில் புரிபவர்கள் எனப் பலரும் உண்டு. உலகியலைத் துறந்த துறவிகளும், பிரம்மசாரிகளும் உண்டு.

ஒருவர் மகானாகவே இருந்தாலும் மேற்கண்ட பக்தர்களைத் தவிர, இப்படிப்பட்ட பணிகளை சாமானியர்கள் மூலமும் தான் அவர்கள் பெருமளவில் செய்வித்தாகவேண்டும். சாமானியர்களில் நல்லவர்கள், சீடர்கள், பக்தர்கள், சேவகர்களும் இருப்பார்கள்; அயோக்கியர்கள், திருடர்கள், சுருட்டல் பேர்வழிகள் எல்லாரும் இருக்கத்தான் இருப்பார்கள். பக்தர், சீடர்களிலும் இன்னும் பழுக்காதவர்களும், அகங்காரம் பிடித்தவர்களும், தவறான புரிதல்களுக்கு உட்பட்டு விரயமாய்க் காரியங்கள் செய்பவர்களும் கூட இருப்பார்கள்.

நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியத்தான் செய்யும். அங்கு இங்கு மடை உடைந்து நீர் வீணாகவும் போகும். மகான்களும் உலகின் இந்த இயற்கையான மாயை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுத்தான் செய்கிறார்கள்; அப்படித்தான் வேலை செய்தாக வேண்டும்.

பணத்திற்கென்று ஒரு கெட்ட குணம் எப்போதும் உண்டு. பணம் ஏராளமாக வரும்போது, மாயையும் உடன் வரும். சாமானியரும் உட் புகுந்து சுருட்டப் பார்ப்பார்கள். ஆன்மீக தாகத்தோடு வந்தவர்களில் சிலர் கூட அந்தப் பணப்புழக்கம், பதவி, ஆடம்பர வேட்கை, புகழாசை என்று மயங்கித் திசை மாறியும் போவார்கள்.

சுவாமி சிவானந்தர் தம் மடத்தில் ஓர் ஆள் பணம் சுருட்டுகிறான் என்று தெரிந்தால் அவர் அதனை மன்னித்துவிட்டு மற்றவர்களிடம் சொல்வார், “ஒரு திருடன் மடத்துக்குள் இருந்தான் என்றால், வெளியுலகில் ஒரு திருடன் குறைவு என்று அர்த்தம். அவன் வெளியுலகத்தில் இல்லாமல் மடத்துள் இருப்பது நல்லதே. இங்கு ஆன்மீக சூழலில் இருந்தால் அவன் ஒரு நாள் திருந்துவான்; வெளியுலகில் அவன் தானும் கூடுதல் கெட்டுப்போய் சமுதாயத்துக்குக் கூடுதல் கெடுதியும் செய்வான்” என்பார்!

This image has an empty alt attribute; its file name is main-qimg-b50f15141f0624cd485c916a4aa635ad
ஒரு முறை அவர் ஆசிரமத்தில் கடன் பெருகிற்று; நன்கொடைகள் வறண்டது. ஆனாலும் அவர் சொன்னது: “நாம் இறைவனின் பணியைச் செய்கிறோம்; அவர் பணம் தருகிறார். பணம் உலகியரின் பாக்கெட்டில் உள்ளது; அவர்கள் தந்தால் பணிகளைத் தொடர்வோம்; இல்லையெனில் நாம் ஆரம்ப காலத்தில் எப்படி அன்னசத்திரங்களில் பிச்சை எடுத்து உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்தோமோ அதற்குத் திரும்புவோம். நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை” என்றார்.

மகாத்மாக்களின் நிலைப்பாடு அதுவே. செல்வத்தால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. அவர்கள் சாமானியத் தொழிலதிபர்கள் போல் அல்ல. மகான்களின் அகத்துறவு நிலை அப்படி. வெளியில் காணும் ஆடம்பரங்களை வைத்து ஒரு மகானை எளிதில் எடை போட்டுவிட முடியாது.

ஜக்கி வாசுதேவின் ஆசிரமம், வனப் பகுதியில் மரங்களை வெட்டியல்லவா வந்தது? எட்டிமடையில் அம்மாவின் அமிர்தா பல்கலைக் கழகம் பல ஏக்கர் பரப்பில் ஒருவித வனப் பகுதியில் அல்லவா விரிந்துள்ளது? என்றெல்லாம் பலரும் கேள்வியெழுப்புகிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is main-qimg-199c70c131802e2d3e38c70f2ffff75d
என் குரு அம்மா மாதா அமிர்தானந்தமயி சொல்வார்: ‘நீண்டகாலப் பலன் தரும் ஒரு பழ மரம் ஒன்று வேண்டுமானால், அதை நட்டுப் பயிரிட்டு, அது வளர்ந்து நிழல் பரப்பும் இடம் யாவிலும் உள்ள புதர்ச்செடிளும், சிறு செடிகளும் நசிக்கலாம். பெரிய நன்மைக்காக சில சிறிய தியாகங்கள் தவிர்க்க முடியாதவை”.

ஒரு காலத்தில் முட்செடிக்ளும் புதர்களும் அடர்ந்த வனமாக எட்டிமடைப் பகுதி இருந்தது. அதை விலைக்கு வாங்கிய பின்னும் கல்லூரிக்கு அரசு அனுமதி உடனே கிட்டவில்லை. அம்மா ஆசிரம பிரம்மச்சாரிகள் ஓரிரு ஆண்டுகள் அப்புதர்களையும் கருவேல மரங்களையும், அங்கு வாழ்ந்த பாம்பு தேள்களையும் அழித்துப் பதப் படுத்தி, ஏராளமான பழமரங்கள், பூ மரங்கள், நிழல் மரங்களை நட்டார்கள்.

பின்னர் அனுமதி கிட்டியது. பல்கலைக்கழகம் அங்கு வளர்ந்தது. அந்தப் பெரும் வளாகமே இன்று ஒரு பெரும் காடுபோல ஏராளமான மரங்களைத் தாங்கி சுற்று சூழலையே மேம்படுத்தியுள்ளது.

அங்கு வந்து படிப்பது என்பது பெரும் தொகை செலுத்த வசதியுள்ளவர்களுக்கே சாத்தியம். பல்கலைக் கழகத்தில் வசூலாகும் பணம், எத்தனையோ அம்மாவின் இலவச சமுதயப் பணிகளுக்கு மடை திருப்பி விடப் படுகிறது. உலகியல் கல்வியோடு சமுதாய நலப் பணிகளையும் மாணவர்கள் கற்றுப் போகிறார்கள் அங்கே. ஏராளமான தொழில் வாய்ப்புகளை சுற்றுவட்டார சாமானிய மக்களுக்கு அந்த பல்கலைக் கழகம் உருவாக்கித் தந்துள்ளது.

என் குருவான அம்மாவோ, அல்லது ஜக்கி வாசுதேவோ, கோடி கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு மடாதிபதிகளாய் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவற்றால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு அவர்கள் 18-20 மணி நேரம் சமுதாயத்துக்காகவே செயல் படுகிறார்கள். “கொடுத்துக்கொண்டே இரு” என்பதுதான் அவர்கள் செயல் பாடு.

This image has an empty alt attribute; its file name is main-qimg-3614cc2c03f3cd153404bb01707580e2
அவர்கள் உபயோகிக்கும் விலை மதிப்பு கூடிய வாகனங்களைப் பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பில் ரயில் பயணம் செய்து அவர்கள் செயல் பட்டால், அவர்கள் தம் நேரத்தையும் திறனையும் வீணடிப்பதேயாகும். அதற்கு பதில் சொகுசு வேனில் பயணிக்கையிலேயே உறங்கி ஓய்வெடுத்தால் மற்ற நேரங்கள் அவர்கள் தம் பணிக்காகச் மேலும் திறனாகச் செலவு செய்கிறார்கள் என்று பொருள். (மீண்டும் பெரிய பழ மரத்துக்காகப் புதர்களை வெட்டுவது என்பதை நினைவு கூறுங்கள்).

அவர்கள், பெரிய அளவில் விளம்பரத்துக்கு செலவழித்து வியாபாரம் செய்பவர்களைப் போல. விளம்பரம் செலவல்ல. அது ஒருவித முதலீடு. அதுபோல இம்மகான்கள் தம் செயல்பாடுகளில் நீங்கள் குற்றம் காண்பது போன்ற சில கூடுதல் பயண வசதிகள் போன்றவை வைத்திருந்தால் அவை மீண்டும் அவர்களின் சமுதாயப் பணிகளுக்கு முதலீடுகளே.

“நான் வெளியுலகம் அறியாமல் 10 பேருக்கு உதவ வேண்டுமா அல்லது விளம்பரம் செய்து 1000 பேருக்கு உதவவேண்டுமா என்றால் நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்” என்பார் சுவாமி சிவானந்தர்.

அது தான் தற்கால மகான்களின் செயல்பாடு.

போன வாரம் மாதா அமிர்தானந்தமயியின் 66ஆவது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் வந்திருந்தார். எதற்கு இத்தனை ஆடம்பர விழாக்கள்?

This image has an empty alt attribute; its file name is main-qimg-0c55004b4b2e9b00476ce0037d37b0b1
அதைத் தெரிந்துகொள்ள, அவரது ஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் அறிமுகப் படுத்தப் படும் பெரும் சமுதாய நலத் திட்டங்கள் பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.

4 ஆம் வகுப்பு தாண்டாத, ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த ஓர் கிராமத்து பெண் தம் 66 ஆண்டுகால வாழ்க்கையில் சாதித்துள்ளவைகளை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது. அதைத் தெரிந்துகொண்டால் தற்கால ஆன்மீகவாதிகளின் போக்கு புரியும்.

அதைத் தெரிந்துகொள்ள ஓர் கால் மணி நேரம் செலவழியுங்கள்:

ஆன்மீகம் மேலோட்டமானது அல்ல. அதை ஆழ்ந்து அறிந்தே புரிந்துகொள்ள முடியும்.

தங்க நகைகள் பிரபலமாகும் போது கில்ட்டு நகைகளும் வரத்தான் செய்யும். ஆங்காங்கே போலி ஆன்மீகவாதிகளும் வரத்தான் செய்வார்கள். பக்கா ஏமாற்றுக் காரர்களும் வரலாம். அதுவும் இறைவனின் மாயையில் ஓர் அம்சமே.

நமக்குப் பரிச்சயமான ஒரு லிட்டர் குவளையை மட்டும்வைத்துக்கொண்டு ஏரித்தண்ணீரையே அளந்து தீர்ப்பளிக்கிறேன் என்று சொல்வது சரியல்ல.

Loading

To what extent Hinduism has reached the west? Who are the main saints that contributed in spreading Hinduism’s concepts across the globe?

Hinduism is spreading around the world definitely, but not by conversion but by acceptance of Sanatana Dharma (Hindu’s dharmic way of life) by so many followers who won’t figure in any national census identified as Hindus!

Hinduism as a religion practised at a commoner level (worship of different God forms, formal temple worship, rituals etc) may not be spreading (except perhaps for Krishna Consciousness Movement by ISKCON) globally. Unlike abrahamic religions with one god and one holy book, Hinduism has so many  facets. Hence there is is virtually no commonly acceptable mode of conversion to Hinduism. There is no ‘business’ of religious conversion to Hinduism ever existing in it. There is virtually no impetus in Hinduism to convert people of other religions.

Hinduism has such a wide base that there are umpteen paths within it for one to practice Hinduism. One path of Hinduism that is most appealing to many well educated westerners is Jyana Yoga (The path of Knowledge) and Vedanta (essence of Upanishads). Many non-Hindus with spiritual mindset get hooked Vedanta and Bhagavad Gita and they start getting right answers to their nagging doubts on spirituality not satisfactorily answered in their religions.

And there is the contribution of great spiritual masters and Avatara Purushas of Hinduism who have influenced a lot of non-Hindus to the spiritual paths open to them in Hinduism. There are countless followers of these masters across the world:

  • Sri Ramakrishna Paramahamsa (1836–1886) and Swamy Vivekananda (1862–1902) — Sri Ramakrishna Paramahmsa was a rustic Bengali with little formal education who is considered a Divine Avatar that revived and re-validated practically all major paths and sects of Hinduism during British rule in India.His prime disciple Swami Vivekananda travelled to America and spread the wisdom of Vedanta to eager beavers in the west. At his prompting, a few the other disciples of Ramakrishna — Swami Saradananda, Swami Turiyananda, Swami Trigunatitananda and Swami Abedananda travelled to west and spread the message of Vedanta.

(Picture above: Sri Ramakrishna Paramahamsa &Swami Vivekananda)

  • Sri Ramakrishna Paramahamsa’s talks and discussions on multifarious aspects of Hinduism in the most simplified and easily digestible fashion were recorded and made available in a book The gospel of Sri Ramakrishna by his house holder disciple Sri Mahendranath Gupta. It was later translated into English by Swami Nikilananda. This is one magnum opus in Hindu spiritual literature that is being read and re-read by countless spiritual seekers cutting across all sects and sub-sects of Hinduism and all other religiously and spiritually inclined people across the the world, across religions.

Sri Ramakrishna Vedanta Society building, Boston, USA

Swami Rama Tirtha

Swamy Rama Tirta (1876–1906): He travelled Japan and USA in 1902 and influenced lots of Buddhists and Christians towards Hinduism. He spoke on practical Vedanta to Amrican audience. He was a true sanyasi in the sense that he travelled to USA and several other countries totally without carrying any money or luggage.

 

 

 

Read more

Loading

Why is Sri Ramakrishna Paramahamsa revered as a great saint?

Sri Ramakrishna Paramahamsa was not just a saint, but an Avatara Purusha. To his closest devotees, he had revealed that he was an avatar. There are so many aspects of him that make him great and we shall briefly see some of them here:

  • He was one of the great contributors to the revival of Sanatana Dharma (Hinduism) , which was precariously eclipsed by Western (Christian) influence due to the British Raj prevalent during his time (1836–1886).
  • He was one standing example to prove that every facet of Hinduism — be the path of Bhakti (including worship of multiple God forms), the path of Gnyana (ending up in Advaita Philosophy), the path (Pathanchali) Yoga (practices in meditation ending in Nirvikalpa Samadhi), the path of Kundalini Yoga (from Tantra) etc are all valid and true, by undergoing intense spiritual practices and experiencing Ultimate Truth in every path.
  • During his period, the path of Tantra, which was highly secretive was being practiced by some people for wrong purposes. Tantra involved spiritual practices involving experimentation in intimate man-woman relationship as a means to attain union of Soul and God and many of its rituals looked rather very extreme, dirty and abhorrent. Sri Ramakrishna was bold enough to even tread this path (guided by a senior lady Guru Bhairavi Brahmani) and was successful experiencing the highest state, by undergoing all the rigorous practices.Based on this experience, he could declare that even Tantra was a valid path to attain God; but he did not recommend it as a practice to his disciples, warning that there are more chances of falling rather than rising in that path for most people.
  • By his basic mindset, he was a Shakta (worshiper of Divine Mother, Shakti – Kali). At his earliest sadhana periods, he did intense tapas to get a darshan of Bhavatarini Kali (at Dakshineswar Temple) and got Her darshan. Devi merged in Him. He practiced Vaishnavism and had visions of Sri Rama, Devi Sita, Lord Krishna, Radha, Hanuman and many such God forms. He realised that all these God forms are verily inside Him.
  • Having tasted experience in God through various paths of Hinduism, he tried Islam and Christianity too and practicing and meditating on these paths, he realized that those paths also lead to God.
  • With such a varied experience behind him, he declared “As many faiths, so many paths”. He was a Vaishnava amidst devotees of Vishnu; he was a Shakta amidst devotees of Devi; he was a Christian amidst worshipers of Jesus. He was a Gnyani amidst Advaitis. He was a Yogi amidst yogis. People from every walk of life and every sect of religion who were blessed to come across him felt he was their own. Amidst all the paths, he proposed the path of Bakthi to one’s own Ishta (personal God) as the easiest and best way to attain God suited for majority of people.
  • He declared that kamini and kanchana (sex and gold) are the two greatest impediments for any spiritual seeker to attain God. He was emphatic and forthright that without relinquishing both, no spiritual attainment is ever possible.
  • He had no education beyond some primary schooling. This unassuming Brahmin was a simpleton to the core. He only spoke rustic Bengali. He could not touch money with his hand. He could not carry anything with him for tomorrow’s use.
  • He married when he was 24 years old and Saradadevi was 5 years old at that time. When Saradadevi came to live with him at Dakshineshwar, he declared to her that she was no different from the Divine Mother at the temple. Their life was a wonderful example to the world that a husband-wife relationship of the highest caliber was indeed possible without sex between them.
  • He spoke about God and spirituality all the time. Whatever he spoke was of the simplest and most easily comprehensible knowledge of the Supreme. What Pundits and scholars could not understand by reading Bhagavad Gita and Upanishads, they could get clarification and clarity from this rustic Poojari who did not study Sanskrit.
  • After 12 years of intense sadhanas in so many paths, he was ready to teach the world. He cried to divine mother to send qualified and eager aspirants who are yearning for divine knowledge. And young and educated aspirants started coming. During his living time, hardly three dozen people knew that he was a Mahatma/ Avatara par excellence.
  • It was his divine scheme that all his teachings and all his spiritual wealth was meant to be distributed to the outer world after his death (that happened due to his throat cancer when he was 50).
  • Lead by Swami Vivekananda, 16 of his young disciples left worldly life and took up Sanyas and lead a life of intense austerities after his death. Sarada Devi gave them emotional and spiritual support. Initiated by Swami Vivekananda, Sri Ramakrishna Math came up much later after his death.
  • Selfless service was one of the activities of Sri Ramakrishna Math. The inspiration for this came to Swami Vivekananda from Sri Ramakrishna who declared that as every human being is verily a form of God, we can serve God by serving them.
  • All his precious teachings of spirituality in the simplest language was destined to be given to the world after his death by his house Holder devotee Sri Ma- (Mahendra Nath Gupta). His Bengali book Sri Sri Ramakrishna Kathamritam (later in English The Gospel of Sri Ramakrishna) became a source book of Hinduism for every ordinary person to read, grasp and practice.

Loading